Categories: தமிழகம்

மொட்டை மாடியில் கட்டு கட்டாக பணம்.. அமைச்சர் துரைமுருகன் உறவினர் வீட்டில் அதிர்ச்சி : அழுது புலம்பிய மூதாட்டி!

மொட்டை மாடியில் கட்டு கட்டாக பணம்.. அமைச்சர் துரைமுருகன் உறவினர் வீட்டில் அதிர்ச்சி : அழுது புலம்பிய மூதாட்டி!

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த காங்ககுப்பம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் திமுகவின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகனின் உறவினராகும்.

ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடல் இருவரும் பேசுவதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மர்ம நபர் ஒருவர் காவல்துறையினருக்கும் தேர்தல் பறக்கும் படையினருக்கும் தேர்தலுக்காக பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக நடராஜன் என்பவர் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் வருவாய் துறையினர் தேர்தல் பறக்கும் படையினர் காங்குப்பம் கிராமத்தில் உள்ள நடராஜன் என்பவர் வீட்டிற்கு விரைந்து சென்றனர்.

அங்கு நடராஜன் என்பவர் வீட்டை தட்டி அரை மணி நேரம் கூப்பிட்டும் யாரும் கதவை திறக்காததால் பக்கத்து வீட்டில் ஏறி மொட்டை மாடி இறங்கிய காவல்துறையினருக்கு சுமார் 500 ரூபாய் பணக்கட்டுகள் ஐந்து கட்டுகள் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து மொட்டை மாடியில் இருந்த படிக்கட்டு கதவை உடைத்து அதிரடியாக உள்ளே இறங்கிய காவல்துறையினரைக் கண்டு நடராஜனின் மனைவி கூச்சலிட்டனர்.

பின்னர் கதவைத் திறந்து உள்ளே வந்த வருவாய்த்துறை நிறம் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமானவரித்துறையினர் வீடு முழுவதும் சோதனை செய்ததில், மொட்டை மாடியில் கிடைத்த பணம் 2.5 லட்சம் மற்றும் பீரோவில் இருந்த பணம் உள்பட 7.50 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கிராம மக்களிடம் விசாரணை செய்ததில் நடராஜன் கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருவதாகவும் இவர் துரைமுருகனின் உறவினர் ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மன வருத்தத்தால் பல ஆண்டுகளாக பேசுவதில்லை எனவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

வீட்டிற்குள் இருந்த பணம் 5 லட்சம் வட்டிக்கு கொடுத்ததாகவே இருக்கட்டும் ஆனால் வீட்டின் மொட்டை மாடியில் இருந்த 2.5 லட்சம் பணம் யாருடையது எப்படி மொட்டை மாடிக்கு எப்படி சென்றது என்று காவல்துறையினர் நடராஜன் இடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பணம் திமுகவை சேர்ந்ததா அல்லது அதிமுகவை சேர்ந்ததா அல்லது பிஜேபி கட்சிக்கு சேர்ந்ததா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு திடீரென 50க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் வருவாய் துறை, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் கிராமத்திற்குள் வந்ததால் கிராம மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

2 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

2 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

2 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

3 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

3 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

4 hours ago

This website uses cookies.