திருச்சி : சிறகுகள் வெட்டப்பட்ட நிலையில் 300 பச்சைகிளிகள் உட்பட 500 பறவைகள் மீட்டு வனத் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருச்சி பாலக்கரை அடுத்துள்ள கீழப்புதூர் பகுதியில் குருவிக்காரன் தெருவில் உள்ள வீடுகளில் பச்சைக்கிளிகள் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று வீடுகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கிளிகள் பறக்க முடியாத வகையில் அதன் சிறகுகள் வெட்டப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டனர்.
சுமார் 300க்கும் மேற்பட்ட பச்சைக்கிளிகளையும், 150க்கும் மேற்பட்ட முனியாஸ் என்ற பறவையும் பறிமுதல் செய்தனர். தமிழக வனத்துறை சட்டபடி இந்த வகை பறவைகளை விற்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசின் சட்டத்தை மீறி பச்சைக்கிளிகள் மற்றும் முனியாஸ் உள்ளிட்ட பறவைகளை விற்பனைக்காக வைத்திருந்த வீட்டின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மேலும், வெட்டப்பட்ட கிளிகள் சிறகுகள் வளரும் வரை பராமரிக்கப்பட்டு அதன்பிறகு வனப்பகுதிகளில் விடப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.