வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர்: வேலூர் மாவட்டம், மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனிதா. அனிதா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்து உள்ளார். இந்த நிலையில், அவருக்கு பிரசவ வலி வரவே, அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனிதா அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு சிகிச்சை தொடங்கி உள்ளது. இதனிடையே, நேற்று இரவு வலி அதிகமானதால், அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்கலாம் என மருத்துவர் வெண்ணிலா உறவினர்களிடம் கூறி உள்ளார். இதன் பேரில், இன்று (டிச.17) அதிகாலை அனிதாவுக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்து உள்ளது.
அதேநேரம், அனிதாவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இந்த நிலையில், காலை 8 மணியளவில் அனிதாவும் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தாயும், சேயும் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
அதேபோல், இது தொடர்பாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்து உள்ளனர். மேலும், தாயும், சேயும் உயிரிழந்த தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மருத்துவமனையில் குவிந்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது. மேலும், இது குறித்து கணியம்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேஷன் அருகே நடக்கும் செயலா இது? இளம்பெண் கைது!
முன்னதாக, கடந்த சில மாதங்களாக அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் இறப்பு என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. எனவே, மருத்துவர்கள் மீது சிறப்புக் கவனத்தை அரசு செலுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.