Categories: தமிழகம்

பொறுப்பின்றி ஊர் சுற்றித்திரிந்த மகன்…கண்டிக்க முடியாத விரக்தியில் தாய்-தந்தை தற்கொலை: மதுரையில் சோகம்..!!

மதுரை: அருள்தாஸ் புரத்தில் பொறுப்பற்று ஊர் சுற்றிய மகனின் செயலால் மன வேதனையுற்ற தாய், தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருள்தாஸ் புரத்தை சேர்ந்த கந்தசாமி – ராஜேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். மற்றொரு மகனான அழகர்சாமி (எ) குணா என்பவர் பெத்தானியாபுரம் பகுதியில் தனியே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அழகர்சாமி மதுப்பழக்கத்திற்கு ஆளாகி பொறுப்பற்ற முறையில் இருப்பதாக கந்தசாமியும் ராஜேஸ்வரியும் பலமுறை கண்டித்தும் கண்டுகொள்ளாமல் இருந்ததால் மன வேதனை அடைந்த தம்பதியினர் மதுரை புட்டுத்தோப்பு பகுதியில் உள்ள சிவன் கோயிலில் அமர்ந்து விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் நீண்ட நேரமாக அங்கேயே இருந்து பின்னர் மயங்கி விழுந்ததை அடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த பின்னர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையில் இருந்து வந்தவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொறுப்பற்ற மகனை கண்டிக்க முடியாமல் மனவேதனையில் பெற்றோர் கோவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.