தமிழகம்

பெற்ற தாயே பிள்ளைகளின் படுக்கைக்கு அனுமதி.. தந்தையால் சிக்கிய மனைவியின் கள்ளக்காதலர்கள்!

சென்னையில், பெற்ற தாயே பிள்ளைகளை பாலியல் ரீதியாக உறவுகொள்ள அனுமதி அளித்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை: சென்னை அடுத்த திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சையது (45) – பாத்திமா (38) தம்பதி. இதில், சையது ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இந்த தம்பதிக்கு 17 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், பாத்திமாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 23 வயதான ஆட்டோ ஓட்டுநர் முகமது ரபிக்குடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், தனியார் வங்கி ஊழியர் அப்துல் கலாம் (23) என்பவருடனும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கத்தை அடுத்து, முகமது ரபிக்கும், அப்துல் கலாமும், பாத்திமாவின் இரண்டு மகள்களையும் காதலிப்பதாகக் கூறி உள்ளனர். ஆனால், இவர்களின் காதலுக்கு சையது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகள் முதலில் படிக்கட்டும், அதன் பின் காதல், திருமணம் குறித்தெல்லாம் பேசிக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். ஆனால், கணவரின் பேச்சை கேட்காத பாத்திமா, ரகசியமாக முகமது ரபீக்குடனும் அப்துல் கலாமுடனும் பேசி வந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், தனது மகள்களுக்கும் இருவரையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து, இருவரும் பாத்திமாவின் மகள்களைக் காதலிப்பதாக கூறியுள்ளனர். மேலும், இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் எனக்கூறி தாயே மகள்களிடம் கூறியதால், இருவரையும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் இரவில் சையதிற்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த பாத்திமா, இரண்டு இளைஞர்களையும் வீட்டுக்கு வரச்சொல்லி, தான் பெற்ற குழந்தைகளுக்கே பாலியல் தொல்லை அளிக்கச் சொல்லியிருக்கிறார். இதற்காக, அந்த இரண்டு இளைஞர்களிடமும் பாத்திமா பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ…மூக்குத்தி அம்மன் 2 படத்தில் தரமான சம்பவம் இருக்கு.!

காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறிவிட்டு, இரவில் இவ்வாறு நடந்து கொள்வது சிறுமிகளுக்கு தவறாக தெரிந்தது மட்டுமல்லாமல், இதற்காக இளைஞர்களிடம் தனது தாய் பணம் பெறுவதும் சிறுமிகளுக்கு உறுத்தவே, இதுகுறித்து 2 சிறுமிகளும் தங்களது அப்பாவிடம் கூறி உள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சையத், பாத்திமாவைக் கண்டித்துள்ளார்.

மேலும் இளைஞர்கள் குறித்தும், தாய் பாத்திமா குறித்தும் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமிகளின் தாய் மற்றும் முகமது ரபிக் மற்றும் அப்துல் கலாம் ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

49 minutes ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

3 hours ago

This website uses cookies.