வேலூர் : ஆட்சி மாற்றத்தால் அம்மா கிளினிக் ஊழியர்களுக்கு 5 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறி வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களில் ஒன்று “அம்மா மினி கிளினிக்”. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெரும் வகையில் ஒவ்வொறு பகுதியிலும் சிறிய மருத்துவமனைகள் அமைத்து ஆரம்ப கட்ட நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல் இந்த மருத்துவமனையின் வேலையாகும். இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 5 மாதமாக சம்பளம் வழங்கபடவில்லை என்றும், இப்போது உங்களுக்கு வேலை இல்லை நீங்கள் வீட்டிற்க்கு செல்லலாம் என்று உயர் அதிகாரிகள் கூறியதாகவும்,
நாங்கள் எல்லாம் எங்கே செல்வது என்று 50-க்கும் மேற்பட்ட அம்மா கிளினிக் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் போர்டிகோ பகுதியில் அமர்ந்து கோஷம் எழுப்பியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு அங்கு வந்த போலிசார் மற்றும் அதிகாரிகள் இப்படி போராடுவது சட்டப்படி குற்றமாகும் என்று அறிவுருத்தினர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோர் கண்ணிருடன் கலைந்து சென்றனர். மேலும் இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.