Categories: தமிழகம்

2 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று தாய் தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீத முடிவு..சேலத்தில் சோகம்..!!

சேலம்: காடையாம்பட்டி அருகே குடும்ப தகராறில் இரு குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கணவாய்புதூர் ஊராட்சி கே.மோரூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பிரபாகரன் (32). இவரது மனைவி மரகதம் (30). இவர்களது குழந்தைகள் செல்வகணபதி (7), கோகுலகண்ணன் (5).

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு அது முற்றியுள்ளது. இதில், பிரபாகரன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து பிரபாகரன் வீட்டுக்கு வந்தபோது, மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் அக்கம், பக்கம் தேடிப்பார்த்தபோது, வீட்டின் அருகே இருந்த கிணற்றில் மரகதம் மற்றும் இரு குழந்தைகளும் சடலமாக மிதந்தது தெரிந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி 3 பேரின் உடலை வெளியில் எடுத்தனர்.

இதுதொடர்பாக தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், தம்பதிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், இரு குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு மரகதமும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. மேலும், போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.