மேட்டுப்பாளையம் அருகே சட்டத்துக்கு புறம்பாக கொட்டப்பட்ட உருளைக்கிழங்கு கழிவுகளைத் தின்ற பசுமாடு இறப்பு தாயைப் பிரிந்த கன்று குட்டி பரிதவித்து வரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே விதிமுறைகளை மீறி பவானி ஆற்றங்கரை கரையோரத்தில் கொட்டப்பட்ட உருளைக்கிழங்கு கழிவுகளை தின்ற பசுமாடு உயிரிழந்ததால் தாயைப் பிரிந்த இரண்டு மாத கன்று குட்டி பரிதவித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் மொத்த விற்பனை கூடங்கள் ஏராளமாக உள்ளது. இங்கு நாள்தோறும் கிழங்கு மண்டிகளில் மீதமாகும் உருளைக்கிழங்கு கழிவுகளை குழி தோண்டிபுதைக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால், ஒரு சில மண்டி உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறி இரவு நேரங்களில் கழிவுகளை வாகனங்களில் கொண்டு சென்று மேட்டுப்பாளையம் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பவானி ஆற்றங் கரையோரத்தில் சமயபுரம் பகுதியில் கொட்டி வருகின்றனர்.
இதனால், அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் இந்த கழிவுகளை கால்நடைகள் மற்றும் பவானி ஆற்றில் நீர் அருந்த வரும் யானைகள், காட்டெருமைகள், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உண்டு வருகின்றன.
இந்நிலையில் சமயபுரத்தைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் வளர்த்து வந்த சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பசு மாடு ஒன்று, இந்த கழிவுகளை தின்றதால் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பசு ஈன்ற இரண்டு மாதமே ஆன கன்று குட்டி, தாயின் உடலை பார்த்து கதறுவது, பார்ப்பவர்கள் நெஞ்சை பிழிவதாக உள்ளது.
இந்த கழிவுகளுடன் ஏராளமான நெகிழி காகிதங்களும் கலந்து இருப்பதால் இதை உண்ணும் வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதுடன், மனிதர்களுக்கும் தொற்று நோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கொடுத்து குறித்து கிழங்கு மண்டி உரிமையாளர்களிடம் கேட்ட பொழுது, அவர்கள் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பசுமாடு உயிரிழந்தது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆகவே காவல்துறையும் அரசு அதிகாரிகளும், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் உருளைக்கிழங்கு கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.