திண்டுக்கல் : வண்ணம்பட்டியில் சகோதரியின் மகளுக்கு மயிலாட்டம், கரகாட்டத்துடன் மேளதாளம் முழங்க மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்தது தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக அமைந்திருந்தது
திண்டுக்கல் மாவட்டம் வண்ணம்பட்டியில் முனீஸ்வரன், ஹேமலதா தம்பதியினரின் குழந்தை ப்ரதீக்ஷாவிற்கு இன்று காதணி விழா நடைபெற்றது. காதணி விழாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் குழந்தைக்கு தாய் மாமனின் சீர்வரிசை கொண்டுவரப்பட்டது.
இதில் தமிழரின் பாரம்பரியமான ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், மேளதாளங்கள் முழங்க மாட்டு வண்டியில் தாய் மாமன் உறவினர்கள் தேங்காய், பழம், அரிசி, பருப்பு, தானியங்கள், பனைவெல்லம், சீனி, புத்தாடை, நகை மற்றும் மாலை என பாரம்பரிய முறைப்படி பல தட்டுக்கள் பெண்கள் தலையில் வைத்து கொண்டு வந்து சீர்வரிசை செய்து கிராம மக்களை ஆச்சரியப்பட வைத்தனர்.
இதனால் அப்பகுதியே திருவிழா நடைபெறுவது போல கோலாகலமாக காட்சி அளித்தது.
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
This website uses cookies.