கரூர் : தாயும், 4 வயது மகனை உடம்பில் கயிறு துணியில் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரை அடுத்த கோடாங்கிபட்டி ஆச்சிமங்களம் கிராமத்தில் வசிப்பவத் அமிர்தலிங்கம், முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு கனிஷ் என்கின்ற 4 வயது மகன் உள்ளான்.
முத்துலட்சுமி வீட்டில் தையல் இயந்திரம் வைத்து ஜவுளி துணி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு துணிகள் தைத்து கொடுக்கும் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முத்துலட்சுமி தையல் வேலையில் ஈடுபட்டிருந்த போது அவர் பயன்படுத்தும் கட்டரை மகன் கனிஷ் கண்ணில் பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏற்கனவே கண் ஆபரேஷன் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வரும் புதன்கிழமை அன்று மற்றொரு ஆப்பரேஷன் கண்களுக்கு செய்யப்பட உள்ள நிலையில் அவர்கள் மனமுடைந்து வீட்டில் சில நேரங்களில் அழுது கொண்டே இருந்துள்ளார்.
கடந்த ஒரு மாதங்களாக மனஉளைச்சலில் இருந்த அவர் நேற்று இரவு 11.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய முத்துலட்சுமியும், அவரது 4 வயது மகனும் மாயமாகினர்.
இரவு முதல் அவரது கணவரும், அவர்களது உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்திருக்க கூடும் என சந்தேகித்துள்னர்.
இதனையடுத்து இன்று மதியம் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தாயையும், 4 வயது மகனையும் சடலமாக மீட்டனர்.
இதனை அடுத்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தாந்தோன்றிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாயும், மகனும் உடலிலில் கயிறு துணியால் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.