கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜாண் போஸ்கோ இவரது மனைவி மரிய கொரோட்டி பிரீடா (வயது 40)இவர் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் குலசேகரம் நாகக்கோடு அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பிரேக் பிடித்துள்ளார்.
இதில் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த மரிய கொரோட்டி பிரீடா சாலையில் விழுந்துள்ளார்.
அதே நேரத்தில் குலசேகரத்திலிருந்து திருவட்டார் நோக்கி சென்ற அரசு பேருந்து மரிய கொரோட்டி பிரீடா மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அவர் உயிரிழந்தார்.
மகன் கண் முன்னே தாய் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் காவல்துறையினர் உயிரிழந்த மரிய கொரோட்டி பிரீடாவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதபதைக்கவைத்துள்ளது
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
This website uses cookies.