Categories: தமிழகம்

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெரியம்மா.. கண்கூடாக பார்த்த தங்கை மகன் : உயிரை பறித்த ஓசூர் சம்பவம்!!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெரியம்மா.. கண்கூடாக பார்த்த தங்கை மகன் : உயிரை பறித்த ஓசூர் சம்பவம்!!

கிருஷ்ணகிரியில் ஓசூர் அருகே பேரிகை கொளதாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி,. 39 வயதாகும் அவர் அங்குள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதியின் கணவர் கேசவமூர்த்தி இறந்து விட்டார். இந்த நிலையில் பேரிகை அருகே மகாதேவபுரத்தை சேர்ந்த 40 வயதாகும் வெங்கடேஷ் என்பவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். வெங்கடேஷ்க்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து விட்டார்.

முதலில் வெங்கடேசுக்கும், ஜோதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறி உள்ளது. இதை ஜோதியின் தங்கை மகனான ஹரீஷ் (23) என்பவர் கண்டுபிடித்தார்.

இதையடுத்து பெரியம்மா ஜோதிக்கும், வெங்கடேசுக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு குறித்து அக்கம்பக்கத்தினர் பேசுவதை கேட்டு ஹரீஷ் கடும் கோபம் அடைந்தார். தனது பெரியம்மாவிடம் இப்படி எல்லாம் நீங்கள் செய்யலாமா என்று கேட்டு கண்டித்துள்ளார்.

உண்மை வெளியே தெரியவந்ததால் ஜோதி, கள்ளக்காதலன் வெங்கடேசை தனது வீட்டுக்கு இனிமேல் வரவேண்டாம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமை இரவு அங்கன்வாடி மைய ஆசிரியை ஜோதியின் வீட்டிற்கு டிரைவர் வெங்கடேஷ் சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த ஹரீஷ், எதற்காக நீங்கள் இங்கு வந்தீங்க.. இனி மேல் இந்த பக்கமே வரக்கூடாது என்று கேட்டு வெங்கடேசிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட இடையில் வந்த ஜோதி ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ஜோதியும், ஹரீசும் கற்கள் மற்றும் கட்டையால் வெங்கடேசை சரமாரியாக அடித்துள்ளார்கள். இதில் வெங்கடேஷ் படுகாயம் அடைந்தார்.

உடனே படுகாயம் அடைந்து அலறிய வெங்கடேசின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து பேரிகை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, வெங்கடேசின் கள்ளக்காதலி ஜோதி மற்றும் அவருடைய தங்கை மகன் ஹரீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் ஓசூர் பேரிகை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

19 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

20 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

20 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

20 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

20 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

21 hours ago

This website uses cookies.