Categories: தமிழகம்

மகளின் உல்லாசத்தால் பறிபோன தாயின் உயிர் : துப்புரவு பணியாளர் கொலையில் திருப்பம்.. விலகிய மர்மம்.. சிக்கிய ஆண் நண்பர்!!

பழனியில் பெண் துப்புரவு பணியாளர் கொலையில் புதிய திருப்பமாக மகளுடன் தவறான தொடர்பில் இருந்த ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.

பழனி அடுத்த பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னம்மாள் (வயது 55). பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.

கணவனைப் பிரிந்து வாழும் அன்னம்மாளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் விடுமுறை நாளில் வீட்டை விட்டு வெளியே சென்று அன்னம்மாள் வீட்டுக்கு திரும்பி வராததால் உறவினர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர்.

அப்போது இருதினங்களுக்கு பிறகு பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு அருகில் அன்னம்மாள் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். உடனடியாக கிராமத்தினர் பழனி தாலுக்கா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.
மேலும் உடல் அழுகி நிலையில் இருந்ததால் பிரேத பரிசோதனைக்காக அன்னம்மாளின் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லாததால் உடனடியாக போலீசார் கொலையாளியை நெருங்க முடியவில்லை. இதனிடையே கிராமத்தில் உள்ள அனைவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

துப்புரவு பணியாளரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க கோரி கிராம மக்களும், சில அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். பிரேத பரிசோதனை முடிந்து இரண்டு தினங்களுக்கு உடலை வாங்க மறுத்த உறவினர்கள் குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசாருக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தனிப்படை அமைத்து குற்றவாளியை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். போலீசார் பல்வேறு கோணங்களில் கொலையாளியை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டனர்.

இந்த நிலையில் அன்னம்மாளின் மகள் புவனா (வயது 27) மீது சந்தேகம் அடைந்த போலீசார் புவனாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டனர். புவனாவுக்கு சில ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததும் அவர்களுடன் தொலைபேசியில் பேசி பழகி வந்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து புவனாவின் ஆண் நண்பர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் புது ஆயக்குடியைச் சேர்ந்த கனகராஜ், அன்னம்மாளை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

கூலி வேலைக்குச் சென்று வரும் கனகராஜுக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் அன்னம்மாளின் மகள் புவனாவிடம் பழகி வந்ததும், விஷயம் தெரிந்து கனகராஜை அன்னம்மாள் எச்சரித்ததும் தெரிய வந்துள்ளது.

மகளை தன்னுடன் சேர்த்து வைக்கக் அன்னம்மாளை பலமுறை தொடர்ந்து வற்புறுத்தி வந்த கனகராஜ். இந்த நிலையில் கனகராஜ் அன்னம்மாளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான். விறகு சேகரிக்க அதற்காக கம்மாய்க்கு அருகில் சென்ற அன்னம்மாளை நோட்டமிட்ட கனகராஜ் பின் தொடர்ந்து சென்று அன்னம்மாளை தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்துள்ளது.

கொலை சம்பந்தமாக கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்த பழனி தாலுகா காவல் நிலைய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மகளுடன் பழகிய நபரை எச்சரித்ததற்காக தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

17 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

18 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

19 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

19 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

20 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

20 hours ago

This website uses cookies.