வேலூர் அருகே மாம்பழம் ஜூஸ் பாக்கெட்டில் எலி இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் கேவி குப்பம் அடுத்த பி.கபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் நதியா என்பவருக்கு 13 வயதில் ஒரு மகளும், நான்கு வயதில் சரவணன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒட்டல் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இவரது மகனும், மகளும் ஹோட்டல் எதிரே உள்ள பெட்டிக்கடையில் 10 ரூபாய் விலை உள்ள தனியாருக்கு சொந்தமான மாசா மாம்பழம் ஜூஸ் வாங்கி வந்துள்ளனர்.
அப்போது, சிறுவன் சரவணன் ஜூஸ் பாக்கெட்டை எடுத்து ஜூஸ் ஓட்டையில் ஸ்டாவை வைத்து உரிய தொடங்கியுள்ளான். ஜூஸ் வழக்கம்போல் இல்லாமல் கசப்பு தன்மையுடன் இருந்துள்ளது.
இதனிடையே, ஜூஸ் பாக்கெட்டை பிரித்து பார்த்த பொழுது, அதில் குட்டி எலி ஒன்று இறந்துள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு, மாம்பழம் ஜூஸில் எலி இருந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து, தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் மாம்பழம் ஜூஸில் எலி இறந்திருந்த சம்பவம் கேவிகுப்பம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.