தமிழகம்

ஏடிஎம் மையத்தில் மின்சாரம் தாக்கி வடமாநில இளைஞர் உயிரிழப்பு.. ஃபெஞ்சல் புயலில் சோகம்!

சென்னை முந்தியால்பேட்டையில் மழைக்கு இடையே ஏடிஎம் மையம் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெங்கல் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதலே விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

அந்த வகையில், கனமழையால் முத்தியால்பேட்டையில் உள்ள மண்ணடி பிரகாசம் பகுதி சாலைகள் மழைநீரால் நிரம்பியவாறு குளம் போல் உள்ளன. இந்த நிலையில், இந்தப் பகுதியில் உள்ள மலையப்பன் தெருவில் சந்தன் (20) என்ற இளைஞர் வசித்து வந்தார்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவரான இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இவர் இன்று (நவ.30) நீர் சூழ்ந்த பிரகாசம் சாலையில் உள்ள தண்ணீரில் நடந்து வந்து, அங்குள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காகச் சென்று உள்ளார்.

அப்போது, சந்தன் திடீரென மயங்கி விழுந்து உள்ளார். இதனையடுத்து, இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், தண்ணீர் விழுந்த அவரை அருகில் இருந்த ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: புயல் கரையைக் கடக்க டைம் ஆகலாம்.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை போலீசார், அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஏடிஎம் மையத்தில் இருந்த இரும்புக் கம்பியை கையால் பிடித்த போது மின்சாரம் தாக்கி சந்தன் கிழே விழுந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.