மீண்டும் ஒரு தாஜ்மகால்: தமிழகத்தில் அமைக்கப்பட்ட காதல் சாம்ராஜ்யம்:நெகிழ வைத்த கணவர்…..!!

உண்மைக்காதல் ஒரு போதும் அழிவதில்லை என்பதற்கு உதாரணமாக நடந்துள்ளது ஒரு நிகழ்வு.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கட்டுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கோட்டைமுத்து (75). சென்னை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கொரோனா காலகட்டத்தின் போது மே மாதம் 15 ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு விஜயா உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

மனைவி மீது அதீத பிரியம் வைத்திருந்த கோட்டைமுத்து, அவர் நினைவில் இருந்து மீள முடியாமல் இருந்து வந்துள்ளார்.தன் மனைவியின் அஸ்தியை எடுத்து வந்து திருவாடானை அருகே அவரது சொந்த ஊரான ஆதியூரில் ₹1 கோடி செலவில் அழகிய மணிமண்டபம் கட்டி உள்ளார்.

அங்கு மனைவிக்கு ₹7 லட்சத்து 50 ஆயிரத்தில் வெண்கலச் சிலை அமைத்துள்ளார். அந்த மணி மண்டபத்தின் உள்ளே கணவன், மனைவி கலந்து கொண்ட விசேஷங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து அலங்கரித்துள்ளார்.

நேற்று இந்த மணி மண்டபம் திறக்கப்பட்டது. இதில் உறவினர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மேலும் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள 18 பட்டி மக்களையும் அழைத்து அவர்களுக்கு அறுசுவை விருந்தும் வைத்து கூடவே அனைவருக்கும் வேட்டி சேலை தாம்பூல தட்டையும் அன்பளிப்பாக தந்து நெகிழச் செய்துள்ளார்.

கோட்டைமுத்து கூறுகையில், ‘‘எனது மனைவி விஜயா, குடும்பத்திற்காக உழைத்து அன்பையும், நல்ல பெயரையும் ஏற்படுத்திக் கொடுத்தார். அவரின் நினைவாக இந்த மணிமண்டபத்தை கட்டி உள்ளேன்’’ என்றார்.தாஜ்மகால் போலவே தன் மனைவிக்காக கணவனால் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் இது என ஊரார் புகழ்ந்து வருகின்றனர்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.