தமிழகம்

ஹிட்மேனை மறைமுகமாக தாக்கினாரா MSD? கொதிப்பில் ரசிகர்கள்!

PR பணிகள் குறித்து தோனி கூறிய கருத்து, ரோகித் சர்மாவைக் குறிப்பிடுவதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மும்பை: சமூக ஊடகங்களைப் பயன்படுத்தாத கேப்டனாக மகேந்திர சிங் தோனி செயல்பட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த நிலையில், சோசியல் மீடியாவில் இருந்து விலகி இருப்பதற்கான காரணம் குறித்து சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எம் எஸ் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த தோனி, “வாழ்க்கையின் எந்த நேரத்திலும் சோசியல் மீடியாவின் ரசிகனாக நான் இருந்ததில்லை. எனக்கு பல்வேறு தருணங்களிலும் நிறைய மேலாளர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே என்னிடம் சோசியல் மீடியாவை பயன்படுத்தி, ரசிகர்களுடன் எப்போதும் இணக்கமாக இருங்கள் என்றே கூறுவார்கள்.

குறிப்பாக, கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணிக்காக நான் அறிமுகமான போது, சில ஆண்டுகளில் ட்விட்டர் மிகவும் பிரபலமானது. அதன்பின் இன்ஸ்டாகிராமும் வந்துவிட்டது. அப்போது, நீங்கள் சில பிஆர் பணிகளைச் செய்ய வேண்டும், இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என மேலாளர்கள் கூறுவர்.

அதற்கு, நீங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடினாலே போதுமானது, உங்களுக்கு எந்த பிஆர் பணிகளும் தேவையில்லை என நான் பதிலளிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தோனியின் இந்த வீடியோ ட்ரெண்டான நிலையில், அது ரோகித் சர்மாவை மறைமுகமாக தாக்கி இருப்பதாக ரசிகர்களிடையே விவாதமாகி உள்ளது.

இதையும் படிங்க: புத்தாண்டில் வாரிசு நடிகருடன் குத்தாட்டம்…போதையில் தள்ளாடிய பேபி நடிகை…ரசிகர்கள் ஷாக்..!

முன்னதாக, டி20 உலகக்கோப்பைக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெரிதாக சோபிக்கவில்லை என்பதால், அவர் தனது ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் சோசியல் மீடியாவில் ரோகித் சர்மாவின் பிஆர் ஏஜென்சிகள், இப்போது வரை அவருக்கு ஆதரவாகவே பதிவிட்டு வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.