தமிழகம்

விக்னேஷ் புத்தூரிடம் தோனி சொன்ன ரகசியம்.. வெளியான சஸ்பென்ஸ்!

ஐபிஎல்லில் தேர்வாகச் செய்த பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என விக்னேஷ் புத்தூருக்கு தோனி அறுவுறுத்தியுள்ளார்.

சென்னை: 18வது ஐபிஎல் சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் (மார்ச் 23) சென்னை – மும்பை அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி, சென்னையில் நடைபெற்றது. இதில் முதலில் ஃபீல்டிங் செய்த சிஎஸ்கே 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கியது.

இதன்படி, சென்னை அணிக்கு கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் 26 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் 53 ரன்கள் எடுத்தார். இதனிடையே, மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் பந்துவீச்சாளர் விக்னேஷ் புத்தூர், ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே மற்றும் தீபக் ஹூடா ஆகிய முன்று முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி சென்னை அணிக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

பின்னர், விக்னேஷை போட்டி முடிந்த பிறகு மகேந்திர சிங் தோனி பாராட்டினார். அதோடும் டக் அவுட்டிற்குச் செல்லும் முன்னர், விக்னேஷை அழைத்து சில நிமிடங்கள் பேசினார் தோனி. இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. மேலும், தோனி என்ன பேசினார் என்ற தேடலும் நீடித்தது.

இந்த நிலையில், விக்னேஷின் நண்பரான ஸ்ரீராக் என்பவர் அதனை வெளிப்படுத்தியுள்ளார். விக்னேஷை பயிற்சிக்கு அழைத்துச் சென்ற நெருங்கிய நண்பரான ஸ்ரீராக், போட்டி முடிந்த மறுநாளே அவருக்கு போன் செய்து, தோனி என்ன சொன்னார்? எனக் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா கனவை பார்க்கப் போகிறாரா இபிஎஸ்? டெல்லி விசிட்டின் பரபரப்பு அரசியல் பின்னணி!

அதற்கு, விக்னேஷிடம் என்ன வயது உனக்கு என்று தோனி கேட்டதாகவும், விக்னேஷை ஐபிஎல்லுக்கு அழைத்து வந்த அதே விஷயங்களைத் தொடர்ந்து செய்யவும் தோனி அட்வைஸ் செய்தார் என்றும், ஸ்ரீராக் சஸ்பென்ஸை உடைத்துள்ளார். அதாவது, ஐபிஎல்லில் தேர்வாக செய்வதற்கான பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும் விக்னேஷிடம் தோனி அறிவுறுத்தியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.