Categories: தமிழகம்

கோவையில் தொழில் முனைவோருக்கு எம்.எஸ்.எம்.இ கார்டு : பொதுத்துறை நிறுவனங்கள் அமைக்க காட்மா சங்கம் கோரிக்கை..!

கோவை : கோவையில் பொதுத்துறை நிறுவனங்கள் அமைக்கப்படவேண்டும் என்றும், ஜாப் ஒர்க்கிற்கான வரியானது 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று காட்மா சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பல்வேறு தொழில் அமைப்புகளும் தங்களது கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று வருகின்றன. அதன்படி, கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கத்தினர் (காட்மா) மத்திய அரசிடம் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து காட்மா அமைப்பின் தலைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்றால் தொழில்கள் முடக்கப்பட்டு, பொருளாதாரத்தை இழந்து நிற்கும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் வழங்கப்படும் கடன்களுக்கான தற்போதைய வட்டி விகிதம் குறைக்கப்பட்டு, குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட வேண்டும். மேலும் ஏற்கனவே பெற்றுள்ள கடன்களுக்கும் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும்.

லேபர் சார்ஜ் அடிப்படையில் செய்யப்படும் ஜாப் ஒர்க்கிற்கான ஜி.எஸ்.டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட வேண்டும்.

கோவையில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும். மூலப் பொருள் விலை ஏற்றம் கட்டுப்படுத்தப்பட்டு, விலை குறைக்கப்பட்டு, நியாயமான விலையில் மூலப் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

விவசாயிகளுக்கு “கிசான்” கார்டுகள் வழங்கப்படுவது போல, தொழில் முனைவோர்களுக்கும் தங்கள் தொழில் சார்ந்த மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி சார்ந்த பொருட்கள் வாங்க “எம்.எஸ்.எம்.இ” கார்டுகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

7 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

8 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

8 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

8 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

10 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

10 hours ago

This website uses cookies.