திருப்பூர் – அவிநாசி சாலையில், லாரி திரும்பியபோது அறுந்த மின் கம்பியால் மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளர் ஒருவர் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தைச் சேர்ந்தவர் சுப்பான் என்ற மணி. 58 வயதான இவர், திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், இவர் திருப்பூர் – அவிநாசி சாலை, எஸ்ஏபி ஸ்டாப் அருகில் குடிநீர் கசிவு சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது,அவ்வழியாக பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில் இருந்து, அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்திற்கு நுால் ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
இதையும் படிங்க: மாயமான மாணவி… ஆசை வார்த்தை கூறி ஆந்திராவுக்கு கடத்தி உல்லாசம் : பாய்ந்தது போக்சோ!
இந்த லாரி, ரோட்டில் இருந்து கம்பெனி வளாகத்திற்குள் திரும்பியபோது, அங்கு தாழ்வாகச் சென்ற மின் கம்பி மீது உரசியது. இதனால் மின் கம்பி அறுந்து, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மாநகராட்சு ஒப்பந்தப் பணியாளர் மணி மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றிய அனுப்பர்பாளையம் போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.