திருப்பூர் – அவிநாசி சாலையில், லாரி திரும்பியபோது அறுந்த மின் கம்பியால் மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளர் ஒருவர் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தைச் சேர்ந்தவர் சுப்பான் என்ற மணி. 58 வயதான இவர், திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், இவர் திருப்பூர் – அவிநாசி சாலை, எஸ்ஏபி ஸ்டாப் அருகில் குடிநீர் கசிவு சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது,அவ்வழியாக பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில் இருந்து, அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்திற்கு நுால் ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
இதையும் படிங்க: மாயமான மாணவி… ஆசை வார்த்தை கூறி ஆந்திராவுக்கு கடத்தி உல்லாசம் : பாய்ந்தது போக்சோ!
இந்த லாரி, ரோட்டில் இருந்து கம்பெனி வளாகத்திற்குள் திரும்பியபோது, அங்கு தாழ்வாகச் சென்ற மின் கம்பி மீது உரசியது. இதனால் மின் கம்பி அறுந்து, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மாநகராட்சு ஒப்பந்தப் பணியாளர் மணி மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றிய அனுப்பர்பாளையம் போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.