Categories: தமிழகம்

தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது : கோவையில் ஆய்வு செய்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பெருமிதம்!!

கோவை மாநகர காவல்துறை அலுவலகத்தில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆய்வு

கோவை மாநகர காவல்துறை அலுவலக வளாகத்தில் இணைய வழி குற்றப் பிரிவு காவல்நிலையத்தை தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு இன்று திறந்துவைத்தார்.

இதனையடுத்து மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தவர், கொலை, கொள்ளை, கஞ்சா, தங்கக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, ‘கோவை மாவட்டத்தில் காவலர்கள் சிறப்பாக பணி செய்து வருகின்றனர். கொலை மற்றும் ஆதாயக் கொலைகளில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு பணியாற்றி வருகின்றனர்.

கொலை வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொள்வது, கஞ்சா விற்பவர்களை கைது செய்து சப்ளை குறைக்க நடவடிக்கை எடுத்தவர்கள், தங்கம் கடத்தல் வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.


கோவையில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க 15 காவல் நிலையங்கள் உள்ளது. மேலும் 3 புதிய காவல் நிலையங்கள் வரப்போகிறது.

தமிழகத்தில் கடந்த வருடத்தில் 1597 கொலைகள் நடந்துள்ளது. இந்த ஆண்டு 1368 கொலைகள் நடந்துள்ளது. 15% கொலை குற்றங்கள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாயக் கொலைகள், கொள்ளை வழக்குகள் வெகுவாக குறைந்துள்ளது. இவை, சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதை குறிக்கின்றன. தமிழகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளோம்.

ஸ்மார்ட் சிட்டி, காவல் நிலையங்களை நவீன மயமாக்கும் திட்டத்திலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பெரிய குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன.

காவல்துறையினருக்கு நவீன இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் சந்தேகப்படும் நபரை புகைப்படம் எடுத்தால் அவரது குற்றவழக்குகள் குறித்த தகவல்கள் வந்துவிடும்.

கஞ்சா கடத்தலை தடுப்பதற்காக ஆறு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. மேலும் கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வருபவர்களை கண்காணிக்க தென்காசி, பொள்ளாச்சி, கன்னியாகுமரி உட்பட ஆறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை செய்யப்படுகிறது.

டோல்கேட்டுகளில் நவீன கேமராக்களை பயன்படுத்தி கண்காணிக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இன்றைக்கு இணைய வழி குற்றங்கள் அதிகமாகி வருகிறது. நவம்பர் மாதம் வரை 45 ஆயிரம் இணைய வழி குற்றங்கள் பதிவாகியுள்ளன.

மின்சாரம் நிறுத்தப்படும், நெட் பேங்கிங் கோளாறுகள், குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், திருமண உதவி செய்வதாகவும் இணைய வழியில் பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இவற்றோடு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

எந்த ஒரு வங்கியும் வங்கிக் கணக்கு குறித்த எந்த தகவலையும் கேட்பதில்லை.எனவே வங்கி கணக்கு சம்பந்தமான தகவல்களை பகிர்வதை தவிர்த்தாலே சைபர் குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இதுகுறித்து காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.’ என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.