திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கணவாய்பட்டி பங்களாவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கோபி. இவரது மனைவி தமயந்தி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளராக உள்ளார்.
கோபிக்கும் அவரது அண்ணன் ராஜாங்கத்திற்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்தது. இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலும் உள்ளது.
இந்நிலையில் தமயந்தி நேற்று வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல்லிற்கு வழக்கறிஞரை சந்திக்க தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.
அதே பேருந்தில் கோபியின் அண்ணனும் சென்று கொண்டிருந்தார். பேருந்து கோபால்பட்டி- வடுகபட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் உட்கார்ந்து இருந்த ராஜாங்கம் தமயந்தியை தான் வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டியதில் தலை துண்டானது.
இதை பார்த்த பயணிகள் அலறியடித்து ஓடினர். இதைப்பார்த்த ராஜாங்கம் தப்பி ஓடினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் எஸ்.பி.பாஸ்கரன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி சார்பு ஆய்வாளர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட போலீசார் தப்பியோடிய ராஜாங்கத்தை சம்பவம் நடந்த 20 மணி நேரத்தில் கைது செய்தனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.