Categories: தமிழகம்

இளம்பெண்ணை காதலித்த இளைஞர் படுகொலை : சடலத்தை சாக்கில் கட்டி அணை அருகே வீசிய பயங்கரம்… விசாரணையில் சிக்கிய கொலையாளிகள்!!

திண்டுக்கல் : ஆத்தூர் அருகே காதல் பிரச்சினையில் இளைஞர் படுகொலை, பிணத்தை சாக்கில் கட்டி டேம் அருகே வீசிய பயங்கர சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே சேடபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி . இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் அழகுவிஜய் (வயது 24). கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

இதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன், இவரது மகன் அஜித் (வயது 26). கூலி வேலை செய்து வருகிறார். அஜித்தினுடைய தங்கை துர்கா (வயது 17) கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அழகு விஜய் துர்காவை காதலித்து வந்ததாக தெரிகிறது.

இவர்களது காதல் துர்கா வீட்டாருக்கு தெரியவரவும் இருவரையும் கண்டித்துள்ளனர். இதுகுறித்து அவ்வப்போது தகறாறும் ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு இருவரும் சேடபட்டியில் தனிமையில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்து அங்கு வந்த துர்காவின் அண்ணன் அஜித் தங்கையை கண்டித்ததுடன் அவர் கண் முன்பே அழகுவிஜயை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அழகுவிஜய் உயிரிழந்தார்.

சடலத்தை சேடபட்டி அருகே உள்ள தோட்டத்தில் மறைத்து வைத்துவிட்டு, தந்தை தமிழ்செல்வனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு , இருவரும் சேர்ந்து ஒரு சாக்கு பையில் கட்டி இருசக்கர வாகனத்தில் வைத்து ஆத்தூர் காமராஜர் அணையின் கரை ஓரத்தில் புதருக்குள் தூக்கி வீசிவிட்டு திரும்பி சென்றுவிட்டனர்.

காலையில் அஜித் வீட்டின் அருகில் இரத்தம் இருப்பதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் போலீசாருக்கு தகவல் தெரித்ததை அடுத்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தியதில் தமிழ்செல்வன் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் சாக்கு மூட்டையில் சடலத்தை கட்டி வீசியதாக தெரிவித்ததை அடுத்து அழகு விஜய் சடலத்தை கைப்பற்றிய போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துமனைக்கு உடற்கூற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

சாக்கு மூட்டையில் பிணம் கிடந்த இடத்தை மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன், டி.எஸ்.பி., முருகேசன் மற்றும் செம்பட்டி ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி துர்கா வின் தந்தை தமிழ்செல்வனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

3 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

4 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

5 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

6 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

6 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

6 hours ago

This website uses cookies.