Categories: தமிழகம்

மது வாங்க பணம் தர மறுத்த வாலிபர் கொலை..!! முக்கிய குற்றவாளி கைது..!

புதுச்சேரி: புதுச்சேரியில் மது வாங்க பணம் தர மறுத்த வாலிபரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் @ மூர்த்தி தனியாக தொழில் செய்து வரும் இவர் கடந்த 21 ஆம் தேதி வில்லியனூர் நத்தம் சுடுகாட்டு பகுதியில் கொலை செய்யப்பட்டிருந்தார், சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் போலிசார் இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இக்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், வில்லயனூரை சேர்ந்த சஞ்சிவி மற்றும் புகழ் சேர்ந்து இக்கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சங்கரபரனி ஆற்றங்கரை அருகே பதுங்கி இருந்த இருவரையும் பிடிக்க சென்ற போது புகழ் அங்கிருந்த முட்புதார்க்குள் புகுந்து தப்பி ஒடிவிட்டார்.

இதனால் சஞ்சிவியை மட்டும் கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் சீனிவாசனிடம் பணம் இருந்தும் மது வாங்கி தர மறுத்ததால் புகழின் அறிவுறுத்துதலின் படி அவரை சுடுகாட்டு பகுதி அழைத்து வந்து பாட்டிலால் குத்தி கொலை செய்து விட்டு பணத்தை எடுத்து சென்றதாக சஞ்சிவி தெரிவித்ததை அடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து தப்பி ஒடிய புகழை கடந்த மூன்று நாட்களாக போலீசார் திவிரமாக தேடி வந்த நிலையில், இன்று அவர் வில்லியனூர் கூடப்பாக்கம் ரயில்வே டிராக் அருகே மறைந்திருப்பதாக தணிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அங்கு விரைந்து சென்றனர். இதில் போலீசாரை கண்ட புகழ் அங்கிருந்து தப்பி ஒட முயன்ற போது ரயில்வே டிராக்கில் விழுந்ததில் அவரது இடது காலில் முறிவு ஏற்ப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

KavinKumar

Recent Posts

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

18 minutes ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

39 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

55 minutes ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

1 hour ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

2 hours ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

2 hours ago

This website uses cookies.