Categories: தமிழகம்

ஆண் நண்பர்களுடன் உல்லாசம் : தகாத தொடர்புக்கு இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தை கொலை..சிக்கிய படுபாதகி!!

நீலகிரி : வேறு சிலருடன் முறையற்ற தொடர்பு இருந்ததால் இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தையை கொன்று நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரைப்பேட்டையை சேர்ந்த கீதா என்பவருக்கு இருமுறை திருமணம் நடந்து விவாகரத்து பெற்றவர். இவர் மூன்றாவதாக கோவையை சேர்ந்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்தார்.

இவர்களுக்கு நித்தீஷ் (வயது 3) என்ற மகனும், நித்தீன் (வயது 1) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கார்த்திக் கீதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தம்பதி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இதில் மூத்த மகனுடன் கோவையில் கார்த்திக் தனியா வசித்து வருகிறார். 1 வயது குழந்தை தாயுடன் ஊட்டியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 14ம் தேதி குழந்தை திடீரென மயங்கி விழுந்து விட்டது என கூறி உதகை அரசு மருத்துவமனையில் கீதா அனுமதித்தார்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்ததை உறுதி செய்தனர். பின்னர் உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டதால் உதகை நகர போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்

பின்னர் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைடியில் குழந்தைக்கு அதிகளவு உணவை வாயில் திணித்து மூச்சு திணறவைத்ததும், உணவில் மது கலந்ததும் அம்பலமானது.

மேலும் குழந்தையை தொட்டிலில் வைத்து ஆட்டூம் போது சுவற்றில் தலையை மோத வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் கீதாவிடம் விசாரணை நடத்தியதில், அவர் வேறு சிலருடன் தகாத தொடர்பு வைத்ததும், இதற்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்ததும் தெரியவந்தது.

தையடுத்து சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த உதகை காவல் துறையினர் கீதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். முறையற்ற உறவிற்காக பெற்ற பச்சிளம் குழந்தையை தாயே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

31 minutes ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

33 minutes ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

1 hour ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

2 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

3 hours ago

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

3 hours ago

This website uses cookies.