Categories: தமிழகம்

உணவு, உறைவிடம் கொடுத்த இளைஞர் கொலை : கஞ்சா போதையில் உடன் தங்கியிருந்த இளைஞர் வெறிச்செயல்!

உணவு, உறைவிடம் கொடுத்த இளைஞர் கொலை : கஞ்சா போதையில் உடன் தங்கியிருந்த இளைஞர் வெறிச்செயல்!

மதுரை மாநகர் தத்தனேரி அருகே உள்ள பாக்கியநாதபுரம் ராஜீவ் காந்தி நகர் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர் தனது தந்தையுடன் வீட்டில் வசித்துவருகிறார். இவர் கூலித்தொழிலாளியாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வேலை பார்த்துவந்துள்ளார்.

இந்நிலையில் கார்த்திக் தனது வீட்டில் அவரது உறவினரான தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சீதாராமதாஸ் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமாரை (18) தங்க வைத்துள்ளார்.

இந்த நிலையில் கார்த்திக் மற்றும் உறவினரான செந்தில்குமார் ஆகிய இருவரும் நேற்றுமுன்தினம் இரவு அறையில் சாப்பிட்டு கொண்டிருந்த போது இருவருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது .

இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் தனது உறவினரான கார்த்திக்கின் தலையில் அருகில் இருந்த குக்கரை கொண்டு தலையில் அடித்துள்ளார். இதனால் தலையில் படுகாயம் ஏற்பட்டு அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொல்லப்பட்ட கார்த்திக்

இதனையறிந்த செந்தில்குமார் அங்கிருந்து தப்பிய நிலையில் நேற்று கார்த்திக் அறையில் உயிரிழந்து கிடந்ததை பார்த்த அருகில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து கார்த்திக்கின் சடலத்தை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார்த்திகை கொலை செய்த அவரது உறவினரான செந்தில்குமார் ஏற்கெனவே தேனி மாவட்டத்தில் கொலை சம்பவம் ஒன்றில் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளதும், செந்தில்குமார் அடிக்கடி கஞ்சா புகைப்பதையே வழக்கமாக கொண்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட செந்தில்குமார்

இதனிடையே கார்த்திக்கின் தந்தை அளித்த புகாரின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்த செல்லூர் காவல்துறையினர் கார்த்திக்கை கொலை செய்த செந்தில்குமார் என்ற இளைஞரை தேடிவந்த நிலையில் அவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் தனது அறையில் தங்க வைத்த உறவினரான இளைஞர் கஞ்சா போதையில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

11 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

12 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

12 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

13 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

14 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

14 hours ago

This website uses cookies.