Categories: தமிழகம்

உணவு, உறைவிடம் கொடுத்த இளைஞர் கொலை : கஞ்சா போதையில் உடன் தங்கியிருந்த இளைஞர் வெறிச்செயல்!

உணவு, உறைவிடம் கொடுத்த இளைஞர் கொலை : கஞ்சா போதையில் உடன் தங்கியிருந்த இளைஞர் வெறிச்செயல்!

மதுரை மாநகர் தத்தனேரி அருகே உள்ள பாக்கியநாதபுரம் ராஜீவ் காந்தி நகர் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர் தனது தந்தையுடன் வீட்டில் வசித்துவருகிறார். இவர் கூலித்தொழிலாளியாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வேலை பார்த்துவந்துள்ளார்.

இந்நிலையில் கார்த்திக் தனது வீட்டில் அவரது உறவினரான தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சீதாராமதாஸ் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமாரை (18) தங்க வைத்துள்ளார்.

இந்த நிலையில் கார்த்திக் மற்றும் உறவினரான செந்தில்குமார் ஆகிய இருவரும் நேற்றுமுன்தினம் இரவு அறையில் சாப்பிட்டு கொண்டிருந்த போது இருவருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது .

இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் தனது உறவினரான கார்த்திக்கின் தலையில் அருகில் இருந்த குக்கரை கொண்டு தலையில் அடித்துள்ளார். இதனால் தலையில் படுகாயம் ஏற்பட்டு அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொல்லப்பட்ட கார்த்திக்

இதனையறிந்த செந்தில்குமார் அங்கிருந்து தப்பிய நிலையில் நேற்று கார்த்திக் அறையில் உயிரிழந்து கிடந்ததை பார்த்த அருகில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து கார்த்திக்கின் சடலத்தை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார்த்திகை கொலை செய்த அவரது உறவினரான செந்தில்குமார் ஏற்கெனவே தேனி மாவட்டத்தில் கொலை சம்பவம் ஒன்றில் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளதும், செந்தில்குமார் அடிக்கடி கஞ்சா புகைப்பதையே வழக்கமாக கொண்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட செந்தில்குமார்

இதனிடையே கார்த்திக்கின் தந்தை அளித்த புகாரின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்த செல்லூர் காவல்துறையினர் கார்த்திக்கை கொலை செய்த செந்தில்குமார் என்ற இளைஞரை தேடிவந்த நிலையில் அவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் தனது அறையில் தங்க வைத்த உறவினரான இளைஞர் கஞ்சா போதையில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

19 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

20 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

20 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

20 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

21 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

22 hours ago

This website uses cookies.