கடலூர், திருப்பாதிரிப்புலியூர் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில் பாமக பிரமுகர் சங்கர் என்கிற சிவசங்கர் கடலூர் நகர வன்னியர் சங்க தலைவராக செயல்பட்டு வந்துள்ளார்.
இவர் கேபிள் டிவி தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை தனது வீட்டின் அருகே சிவசங்கர் நின்று கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் சிவசங்கரை வெட்டி உள்ளனர்.
இதனைக் கண்ட அருகில் உள்ளவர்கள் கூச்சலிட்டதால் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. படுகாயம் அடைந்த சிவசங்கர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேல் சிகிச்சைக்காக சிவசங்கர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் குற்றவாளிகள் திருவந்திபுரம் பகுதியில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து
திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் அங்கு விரைந்தனர்.
காவல் துறையினர் கண்ட குற்றவாளிகள் தப்பிவிட முயற்சி செய்தனர். இதில் வெங்கடேஷ் சதீஷ் ஆகிய இரண்டு பேருக்கு கால் முறிவு ஏற்பட்டது அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் முகிலன், வெங்கடேஷ், சதீஷ், ராஜா, கௌஷிக் ஆகிய ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.