Categories: தமிழகம்

இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. 4 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீஸ்..!!!

இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. 4 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீஸ்..!!!

தூத்துக்குடி மேலூர் ரயில்வே நிலையம் அருகில் கோமாஸ்புரம், ராஜுவ் நகரை சேர்ந்த முனியசாமி மகன் முனீஸ்வரன் (வயது 26). சுமை தூக்கும் தொழிலாளி. அங்குள்ள ஒரு குடோனில் வேலை பார்த்துவிட்டு சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 பேர் வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கி கல்லால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த முனீஸ்வரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதன்பேரில் தூத்துக்குடி உட்கோட்ட நகர உதவி காவல் கண்காணிப்பாளர் கெல்கர் சுப்ரமணிய பால்சந்திரா உத்தரவின்பேரில், தெர்மல் நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், முத்தையாபுரம் முதல் நிலை காவலர் சாமுவேல், வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திருமணி ராஜன், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் செந்தில்குமார் மற்றும் காவலர் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

விசாரணையில் முனீஸ்வரன் தாக்கிய தூத்துக்குடி மீளவிட்டான், கக்கன்ஜி நகரை சேர்ந்த சோமசுந்தரம் மகன் சிவா ஆனந்த் (22), கிழக்கத்தியான் மகன் மந்திரமூர்த்தி (35) மற்றும் தூத்துக்குடி போல்பேட்டை மேற்கு பகுதியை சேர்ந்த பிச்சைராஜ் மகன் ராம்குமார் (25) மற்றும் அவர்களது நண்பர் ஒருவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் இரவோடு இரவாக மூன்று பேரை பிடித்து வடபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட சிவ ஆனந்த் மீது ஏற்கனவே சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், ராம்குமார் மீது திருச்செந்தூர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் வடபாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் என 4 வழக்குகளும், மந்திரமூர்த்தி மீது தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

12 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

12 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

13 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

14 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

15 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

15 hours ago

This website uses cookies.