வேலூர் : பரோல் வழங்கக்கோரி வேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது, நளினி பரோலில் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். இதற்கிடையில், நளினியின் தாய் பத்மா முருகனுக்கு பரோல் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் பரோல் வழங்கக்கோரி இன்று காலை சிறை நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் உணவுகளை சாப்பிடாமல் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார்.
இதுகுறித்து சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சிறை நிர்வாகத்திடம் முறையாக அனுமதி கடிதம் கொடுத்தால், முருகன் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவிக்கப்படும். தற்போது அனுமதி கடிதம் கொடுக்காமல் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளது. சிறை விதிகளுக்கு புறம்பானது. ஆகையில் சிறை நிர்வாகத்தை பொறுத்தவரை முருகன் உண்ணாவிரதம் மேற்கொள்ளவில்லை,” என்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.