மதுரை அரிட்டாபட்டி பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது வெடிகுண்டு சத்தம் கேட்டதால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், படக்குழுவினர் அங்கிருந்து சென்றனர்.
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் வனக் காப்பகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நேற்று (டிச.5) சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் திரைப்பட படப்பிடிப்பிற்காக, பெட்ரோல் கேன்கள் போன்ற பொருட்களுடன் பல்லுயிர் வனகாப்பகம் அருகே படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். அப்போது, அதிக சத்தம் எழுப்பும் வெடிகுண்டுகள் வெடிப்பது போன்ற காட்சியும் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஜேசிபி, கிரேன், கம்ப்ரசர் கொண்டு சுமார் 50க்கும் மேற்பட்டோர் பாறைகளை வெடி வைத்து தகர்த்தாகவும் கூறப்படுகிறது.
இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து, பல்லுயிர் தளமாக உள்ள அரிட்டாடிபட்டி பகுதியில் வெடிபொருட்கள் பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்துவதற்கு யார் அனுமதி அளித்தனர் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: என் தம்பி விஜய் செய்தது சரிதான் : பிரேமலதா அறைகூவல்!
ஏற்கனவே, டங்ஸ்டன் எடுப்பது குறித்த விவகாரம் சென்று கொண்டிருப்பதால், படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்குழுவினருடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒத்தக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, மக்களின் எதிர்ப்பால் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி படக்குழுவினரை அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, படக்குழுவினர் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றனர். இந்த படப்பிடிப்பு, இயக்குனர் முத்தையா இயக்கத்தில் அருள்நிதி நடித்து வரும் படம் ஆகும்.
முன்னதாக, அரிட்டாபட்டியில் இந்துஸ்தான் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகின. எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.