11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக நடிகை நமீதா ஆகியோர் பங்கேற்றனர். இதில் பள்ளி மாணவ, மாணவியர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு யோகா செய்தனர். சிறப்பாக யோகா செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
இதையும் படியுங்க: விஜய் சின்ன பச்சா… சுறாவா இல்ல சின்ன இறாவானு 2026 தேர்தலில் தெரியும் : பிரபல நடிகர் கிண்டல்!!
பின்னர் பாஜக மூத்த தலைவர் தமிழிசைசௌந்தர்ராஜன் பேசுகையில், இன்று உலகம் முழுவதும் 170 நாடுகளில் கொண்டாட பாரத பிரதமரே காரணம் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். யோகா செய்தால் மகிழ்ச்சி உண்டாகும், வாழ்வை மேம்படும். டிசம்பர் 21 தியான தினமாக கொண்டாட வேண்டும் என மோடி கூறியுள்ளார். நம் அனைவரின் நோக்கமும் உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என்பது தான் என கூறினார்.
பின்னர் நமீதா பேசுகையில், யோகா 5 ஆயிரம் வருடம் பழசு. 2007 ல் பாலிவுட் நாயாகி கரீனா கபூர் யோகா மூலம் உடலை கட்டுப்பாடோடு வைத்த பின் தான் அனைவருக்கும் தெரிய வந்தது.
ஆங்கிலம் தெரிந்தல் நல்லது தான் ஆனால் அதற்கு முன் கண்டிப்பா தாய்மொழி தான் முக்கியம். என் குழந்தைகளுக்கு தமிழ், தெலுங்கு, குஜராத்தி தெரியும் ஏனென்றால் இது அவர்கள் தாய்மொழி. என் குழந்தைக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் தெரியாது ஆனா கண்டிப்பா ஜெய் அனுமான் தெரியும். என் குழந்தைகளுக்கு அனுமான் ரொம்ப இஷ்டம் இதை நான் பெருமையா தெரிவித்துக் கொள்கிறேன். என் குழந்தைகளோடு நான் வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை என் தாய் மொழியில் தான் பேசுகிறேன் என பேசினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், யோகா மிக பழமையானது ஆனா கடந்த 10 ஆண்டாகத்தான் பிரபலமாகி வருகிறது அது ஏன்னு தெரியலை. மேலும் என் குழந்தைகளுக்கு நான் யோகா, சிலம்பம் உள்ளிட்டவற்றை கற்றுக்கொடுக்கிறேன். நான் யோகா செய்தது கிடையாது ஏன்னா என் பெற்றோருக்கு அது பத்தி தெரியலை. தெரிந்திருந்தா உடலை பிளக்ஸிபலாக வைத்திருப்பேன். ஆனா ஜிம் போறோன். எனது கணவர் நன்றாக யோகா செய்வார் என கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.