Categories: தமிழகம்

மாமியாருக்கு தகாத தொடர்பு.. நேரில் பார்த்த 9 மாத கர்ப்பிணி மருமகள் மர்ம மரணம் : உறவினர்கள் மறியல்… நடந்தது என்ன?

தருமபுரி : அரூர் அருகே நிறைமாத கர்ப்பிணி பெண் மர்ம மரணமடைந்ததால் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அச்சல்வாடி அடுத்த ஒடசல்பட்டி கிராமத்தில் ஜெயக்குமார் என்கிற பிரதீப். இவருடைய மனைவி சோனியா (வயது 20). கடந்த 11 மாதத்திற்கு முன் இவர்கள் திருமணம் செய்தனர்.

தற்போது சோனியா 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் சோனியாவின் மாமியார் பொன்னம்மாவுக்கும், சோனியாவின் அத்தையின் கணவர் பவானி ஆகிய இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதைக் கண்ட சோனியா தனது அத்தை முத்தழகியிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், பவானி – பொன்னம்மா இடையே உள்ள ரகசிய தொடர்பு வெளியே தெரிந்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் சோனியாவை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சோனியாவுக்கு இன்று வளைகாப்பு நடைபெற உள்ள நிலையில் நேற்று தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இறப்பில் சந்தேகமடைந்த பெண்ணின் தந்தை சிங்காரம் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை அரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்த உறவினர்களிடம் விசாரனை மேற்கொண்டபோது, இந்த பெண் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும், இறப்புக்கு காரணமான நபர்களை கண்டறிந்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அரூர் அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து அரை மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மறியலில் ஈடுப்பட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மறியலில் ஈடுப்பட்டவரை அழைத்து செல்லும் போது காவலர் ஒரு தவறி சாலையில் விழுந்தார்.

மருத்துவமனைக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வராததால் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இதனிடையே மறியலால் தருமபுரி அரூர் செல்லும் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

6 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

8 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

8 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

9 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

10 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

10 hours ago

This website uses cookies.