கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு அதிசயா என்ற ஏழு வயது பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது ஏழு வயது மகள் அதிசயாவை காணவில்லை என சங்கராபுரம் காவல் நிலையத்தில் சத்யா அளித்த புகாரியின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுமியை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கும் அவரது புகைப்படத்தை அனுப்பி வைத்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் விசாரணையின் ஒரு கட்டமாக பூட்டை கிராம பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அந்த சிசிடிவி காட்சியில் சத்யா தனது குழந்தை அதிசயாவை காணாமல் போனதாக குறிப்பிடப்பட்ட நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் செல்லும் காட்சியும் அதன் பிறகு சிறிது நேரம் கழித்து சத்யா மட்டும் வீட்டிற்கு திரும்பும் காட்சியும் பதிவாகி இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த சங்கராபுரம் போலீசார் அதிசயாவின் தாய் சத்யாவிடம் சங்கராபுரம் போலீசார் காவல் நிலையத்திற்கு சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துச் சென்று அவரிடம் துருவித் துருவி மேற்கொண்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக தனது மகள் அதிசயாவை வீட்டிலிருந்து அதே கிராமத்தில் உள்ள கிணற்றிற்கு அழைத்துச் சென்று அதிசயாவை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டதாகவும் சிறிது நேரம் கழித்து தனது குழந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி அதிசயவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்,
குடும்ப தகராறு காரணமாக பெற்ற மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் சத்யாவை சங்கராபுரம் காவல் துறையினர் கைது செய்து சிறுமியை கிணற்றில் தள்ளி கொலை செய்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து சிறுமியின் தாய் சத்யாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் இவரது மனைவி சத்யா இவர்களுக்கு அதிசயா என்ற ஏழு வயது பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது ஏழு வயது மகள் அதிசயாவை காணவில்லை என சங்கராபுரம் காவல் நிலையத்தில் சத்யா அளித்த புகாரியின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுமியை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கும் அவரது புகைப்படத்தை அனுப்பி வைத்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் விசாரணையின் ஒரு கட்டமாக பூட்டை கிராம பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது அந்த சிசிடிவி காட்சியில் சத்யா தனது குழந்தை அதிசயாவை காணாமல் போனதாக குறிப்பிடப்பட்ட நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் செல்லும் காட்சியும் அதன் பிறகு சிறிது நேரம் கழித்து சத்யா மட்டும் வீட்டிற்கு திரும்பும் காட்சியும் பதிவாகி இருந்தது இதனால் சந்தேகம் அடைந்த சங்கராபுரம் போலீசார் அதிசயாவின் தாய் சத்யாவிடம் சங்கராபுரம் போலீசார் காவல் நிலையத்திற்கு சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துச் சென்று அவரிடம் துருவித் துருவி மேற்கொண்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக தனது மகள் அதிசயாவை வீட்டிலிருந்து அதே கிராமத்தில் உள்ள கிணற்றிற்கு அழைத்துச் சென்று அதிசயாவை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டதாகவும் சிறிது நேரம் கழித்து தனது குழந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி அதிசயவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், குடும்ப தகராறு காரணமாக பெற்ற மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் சத்யாவை சங்கராபுரம் காவல் துறையினர் கைது செய்து சிறுமியை கிணற்றில் தள்ளி கொலை செய்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து சிறுமியின் தாய் சத்யாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.