திருப்பூர் : ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் தனியாக இருந்த போது வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் நடத்திவரும் இவர் தனது மனைவியை பிரிந்து தனது தாய் மற்றும் தந்தையுடன் சிட்கோ பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று அமாவாசை என்பதால் பாலசுப்பிரமணியத்தின் பெற்றோர் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்ட சூழ்நிலையில் பாலசுப்ரமணியம் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார் .
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பாலசுப்ரமணியம் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்கள் சிலர் வீடு புகுந்து வீட்டில் தனியாக இருந்த பாலசுப்பிரமணியத்தை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
கோவிலுக்கு சென்ற பெற்றோர் வீடு திரும்பி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் பாலசுப்ரமணியம் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.