பாஜகவின் மாநில ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினராக ரவி என்பவர் இருந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை அருகில் வசித்து வருகிறார்.
நிலையில் எண்ணாயிரம் கிராமத்தில் அரசு மருத்துவமனையில் கண் மருத்துவராக பணி புரியும் மனைவி வளர்மதியை காலையில் பணிக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் மதிய உணவிற்காக நண்பகலில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்பக்க கதவுகள் உடைத்திருந்தது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த ரவி மற்றும் அவரது மனைவி வளர்மதி அறை உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கொள்ளை சம்பவம் குறித்து ரவி விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கபட்டு தடயங்களை சேகரித்தனர்.
மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று மோப்பநாய் நின்று விட்டது. அந்தப் பகுதியில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் முண்டியம்பாக்கத்தில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.