திருச்சி ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் குமார். பிளம்பராக வேலை செய்து வருகிறார். மேலும், தனது வீட்டில் ராமநாதபுரம் வகை ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இதேபோல் இவரது உறவினரான கணேசன் என்பவரும் இவ்வகை ஆடுகளை வளர்த்து வருகிறார். குமார் வேலைக்கு சென்று விட்ட நிலையில் கணேசன் நேற்று மாலை கீதாபுரம் தடுப்பணை அருகே உள்ள தோட்டத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
ஆடுகளுக்கு இலை தழைகளை வெட்டிப் போட்டுக் கொண்டிருந்தார். மேலும் அங்கிருந்த சினைஆடுகளை வீட்டிற்கு விரட்டி விட்டார்.
மேலும் படிக்க: 21 வயது பெண் நடனக் கலைஞரை மிரட்டி பலமுறை உல்லாசம்.. தேசிய விருது பெற்ற டான்ஸ் மாஸ்டர் மீது பகீர் புகார்!
வீட்டிற்கு வந்த கணேசன் ஆடுகளை பட்டியல் அடிக்கும்போது 3 சினை ஆடுகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கணேசன் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது சினையாடுகள் அனைத்தும் அவர் வீட்டருகே சென்று கொண்டிருந்த போது திமுக கொடி கட்டிய வெள்ளை நிற ஃபார்ச்சூனர் காரில் வந்த மர்ம கும்பல் காரில் இருந்து இறங்கி கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று ஆடுகளை காரில் ஏற்றிக் கொண்டு திருடி சென்றது தெரியவந்தது.
சிசிடிவியின் காட்சியின் அடிப்படையில் காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதே போன்ற சம்பவம் அடிக்கடி இப்பகுதியில் நடந்து வருவதால் காவல்துறையினர் ஆடு திருடும் கும்பலை கூண்டோடு பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.