Categories: தமிழகம்

அன்பு ஜோதி ஆசிரமத்தில் தொடரும் மர்மம்.. மாயமான மனைவி : பரிதவிப்பில் கணவன்!!

விழுப்புரம் அருகேயுள்ள குண்டாலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்றோர், மனநலம் குன்றியவர்களுக்கு பாலியல் தொல்லை, மற்றும் அடித்து துன்புறுத்தல்களுக்கு ஆளக்கப்பட்ட விவகாரத்தில் ஆசிரம நிர்வாகி ஜீபின் பேபி அவரது மனைவி மரியா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆசிரமத்தில் இருந்த 15 பேர் காணவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்க்கொண்டு வருவதோடு காணாமல் போனவர்களை தேடும் பணி பல்வேறு மாநிலங்களில் தனிப்படை மற்றும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் முண்டியம்பாக்கத்திலுள்ள விழுப்புரம் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு உறுப்பினர்கள் சுனில் குமார்மீனா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினரான பட்டில்கேட்டன் பலிராம், ஏக்தா பக்வித்தா, மோனியா உப்பல், சந்தோஷ்குமார், பிஜீ உள்ளிட்டோர் நேற்றைய தினம் 3 மணி நேரில் தனித்தனியக விசாரனை செய்தனர்.

இரண்டாவது நாளாக தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழுவினர் இன்று குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு செய்தனர்.

இன்றைய தினம் மனித உரிமைகள் ஆனையக்குழுவினர் ஆய்வு செய்யும் போது தும்பூரை சார்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளியான நாகராஜ் தனது மனைவியான தேவியை 7 மாதங்களுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆசிரமத்தில் அனுமதித்ததாகவும் ஆனால் அவர்கள் வேறு ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்து நலமுடன் இருக்கிறார்கள் என்று கூறி அலைக்கழித்ததாகவும் மனைவியை மீட்டு தரக்கோரி அங்கிருந்த குழுவினரிடம் புகார் அளித்தார்.

பின்னர் அவரை அழைத்து விசாரணை செய்ததோடு அவரிடம் உள்ள ஆவணங்களை எடுத்துக் கொண்டு நாளை நேரில் சந்திக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

14 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

15 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

15 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

16 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

16 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

17 hours ago

This website uses cookies.