Categories: தமிழகம்

கல்லூரியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி: மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் போராட்டம்…பெரியகுளத்தில் பரபரப்பு..!!

தேனி: பெரியகுளம் தனியார் கல்லூரியில் உயிரிழந்த மாணவி இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு வேதியல் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவி ஜெனிலியா நேற்று கல்லூரி சார்பில் நடைபெற்ற உடற்பயிற்சியில் marcfh fast ல் ஈடுபட்ட போது உடல் நிலை குறைவு ஏற்பட்டு வலிப்பு வந்து மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஜெனிலியாவின் சகோதரி பவித்ராவை அழைத்து உனது சகோதரிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியதாக கூறப்படுகிறது

இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் பெற்றோருக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் தனது சகோதரி உயிர் இழந்தது தெரியாமல் ஜெனிலியாவை தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோவில் கல்லூரி நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. காலையில் வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே மாணவி இறந்துவிட்டதாக கூறியதைத் தொடர்ந்து தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாணவி இறந்து பல மணி நேரம் ஆவதாக கூறியதைத் தொடர்ந்து தனது சகோதரி ஜெனிலியா இறந்துவிட்டதாக பவித்ரா பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இறந்த ஜெனிலியாவின் உடலை தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்தது. இந்நிலையில், இன்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜெனிலியாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி கல்லூரி நிர்வாகத்தை வந்து அணுகியபோது கல்லூரி நிர்வாகம் சரியான பதில் அளிக்காத நிலையில் கல்லூரி நிர்வாகம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இத்தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கல்லூரி நிர்வாகம் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

UpdateNews360 Rajesh

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.