தமிழகம்

ரெய்டின் போது அமைச்சர் வீட்டு மாடியில் திறக்கப்படாத மர்ம அறை… உடைக்கும் முயற்சியில் அதிகாரிகள்!

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 16, 2025) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீட்டிற்கு அதிகாரிகள் சென்றனர்.

அங்கு ஐ.பெரியசாமியோ, அவரது குடும்பத்தினரோ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், வீட்டை சோதனையிட வேண்டும் என அதிகாரிகள் கோரியபோது, அங்கிருந்தவர்கள் மறுத்துவிட்டனர்.

இதனால், சுமார் 20 நிமிடங்கள் அங்கேயே காத்திருந்த அதிகாரிகள், பின்னர் பெரியசாமியிடம் அனுமதி பெற்று வீட்டிற்குள் நுழைந்தனர்.வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், மாடியில் இருந்த ஒரு பூட்டிய அறையை சோதனையிட விரும்பினர். இந்த அறையை ஐ.பெரியசாமி கூட இதுவரை பயன்படுத்தியதில்லை எனக் கூறப்பட்டது.

ஆனால், அதிகாரிகள் அந்த அறையையும் சோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு அங்கிருந்த காவலர்கள், தங்களிடம் அறையின் சாவி இல்லை எனக் கூறி மறுத்தனர்.

இதையடுத்து, பூட்டை உடைக்க முடிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சுத்தியலுடன் சென்றனர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தலைமைச் செயலகத்தில் பூட்டப்பட்ட அறைகள்இதற்கிடையில், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அவரது எம்எல்ஏ மகனுக்கும் தனித்தனியாக ஒதுக்கப்பட்டுள்ள அறைகளின் நுழைவுவாயில்கள் திடீரென பூட்டப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.