புதுச்சேரி: புதுச்சேரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா ஏஸ் வாகனத்தை திருடி சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி கவிகுயில் நகரை சேர்ந்தவர் மஹாலிங்கம் (37). இவர் டாடா ஏஸ் லோடு கேரியர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் தனது வாகனத்தை காமராஜர் சாலையில் உள்ள கூட்டுறவு வளாகத்திற்கு எதிரே நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். அது போல் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தனது வாகனத்தை நிறுத்தி விட்டு சென்று பின்னர் காலை வந்து பார்த்த போது அந்த இடத்தில் டாடா ஏஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்,
இது குறித்து உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் இரவு டாடா ஏஸை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்ததை அடுத்து, அதனை திருடி சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.