தமிழகம்

நாதக சிக்கவில்லையா? சீமானுக்கு விஜய் வைக்கும் அரசியல் பொறி!!

நாதக காளியம்மாள், விஜயின் தவெகவில் இணைவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்தாலும், சீமான் கட்சியில் முக்கிய நிர்வாகி விலகியிருப்பது அரசியல் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

சென்னை: சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜூனா, அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளராக உள்ள நிர்மல் குமார் ஆகியோர் வந்தனர்.

இவர்கள் இருவரும் தவெகவில் இணைந்த பிறகு, அவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக அறியப்படும் பேச்சாளர் ராஜ்மோகனும் பனையூர் அலுவலகம் வந்துள்ளதாகல், அவரும் தவெகவில் இணைந்த பிறகு முக்கிய பொறுப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான காளியம்மாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை காளியம்மாள் மறுத்துள்ளார் என தனியார் செய்தி ஊடகம் தெரிவிக்கிறது. இருப்பினும், காளியம்மாள் சமீப காலமாக நாதகவில் அதிருப்தியில் உள்ளதால், மிக விரைவில் அவரும் இணைவார் எனக் கூறப்படுகிறது.

இந்த இடத்தில், அதிமுக, விசிக ஆகிய கட்சிகளின் முன்னாள் நிர்வாகிகளைத் தூக்கிய தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு சற்று நிதானம் காட்டுவதாகத் தெரிகிறது. ஏனென்றால், சீமானின் பெரியார் எதிர்ப்பு பேச்சு, பிரபாகரன் உடனான சீமானின் சந்திப்பு கேள்விக்குறியானது ஆகியவை நாதகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் : ரூட்டை மாற்றிய எடப்பாடி பழனிசாமி..!!

ஏற்கனவே, மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகி வந்த நிலையில், தற்போது மாநிலப் பொறுப்பாளர் ஜெகதீசன் பாண்டியன் விலகியுள்ளார். இதுபோன்று முக்கிய நிர்வாகிகள் விலகினால், நாதக ஆட்டம் காணும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதேநேரம், நாதக நிர்வாகிகள் அவர்களாகவே வெளியேறுவது புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு வாக்கு வங்கியை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.