நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி உள்ள கிங்டம் திரைப்படம் இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போல மிகத் தவறாக சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம் பெற்றுள்ளதாகவும், இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்களை ஒடுக்கினார்கள் என ‘கிங்டம்’ திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத் திரிபு என கூறி நாம் தமிழர் கட்சியினர் தமிழ்நாட்டில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சோனா மீனா திரையரங்கில் வெளியாகி உள்ளது.
திரைப்படத்தை திரையிட கூடாது என கூறி நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் சரவணன் தலைமையில் 20-க்கு நாம் தமிழர் கட்சியினர் திரையரங்க மேலாளரிடம் இலங்கை தமிழர்களை தவறாக சித்தரிக்கும் இந்த திரைப்படம் திரையிடக்கூடாது.
மேலும், திரைப்பட பேனர்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.தொடர்ந்து திரையிட்டால் அறவழியில் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர் .
இதனை தொடர்ந்து இன்று மதியம் திரையிட இருந்த 2.30 திரையிட இருந்த காட்சி ரத்து செய்யப்பட்டது. மேலும் திரையரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த திரைப்பட பேனர் அகற்றப்பட்டது.
திரைப்படத்தின் எதிர்ப்பு காரணமாக நாம் தமிழர் கட்சியினர் அங்கு குவிந்தததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.