நாகையில் தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவியை காம இச்சைக்கு அழைக்கும் ஆசிரியரின் செல்போன் உரையாடல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தை அடுத்த புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அக்கல்லூரியில் உடற்கூறியியல் ஆசிரியராக பணிபுரியும் நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதிஷ் என்பவர் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அக்கல்லூரியில் பயிலும் நர்சிங் மாணவி ஒருவரிடம் ஆசிரியர் தனது காம இச்சைக்கு அடிபணியுமாறு பேசும் செல்போன் உரையாடல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருபாலர் பயிலும் நர்சிங் கல்லூரியில் மாணவர்களும், மாணவிகளும் பேசிக்கொள்ள கூடாது என்ற விதி உள்ள நிலையில், ஆண்களிடம் பேசும் மாணவிகளை ஆசிரியர் சதிஷ் தனியாக அழைத்து கண்டித்து வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி, ஆசிரியர் சதிஷ் மாணவி ஒருவரை தனது வீட்டிற்கு கண்டிக்க அழைப்பதும், அதற்கு அந்த பெண் நான் கல்லூரிக்கு வருகிறேன் சார் என்று கூறிவதும், அதற்கு அந்த ஆசிரியர் வீட்டிற்கு வருமாறு கட்டாயப்படுத்திய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருகட்டத்தில் ஆசிரியரின் தொல்லையில் இருந்து நழுவுவதற்காக, தனக்கு மாதவிடாய் வலி இருப்பதாக சொல்லி அந்த மாணவி சமாளிக்கவே, அதையும் புரிந்து கொள்ளாத அந்த காமவெறி கொண்ட ஆசிரியர், பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் வா என்று தனது வீட்டிற்கு அழைப்பது போன்ற பேச்சுக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகையில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிக்கு, அதே கல்லூரி ஆசிரியர் பாலியல் வன்புணர்வோடு செல்போனில் தொல்லை கொடுக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாஜக மாவட்ட தலைவர் கார்த்திகேயன், கல்லூரி மாணவிகளிடம் சமரசத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ வைரலாகிய நிலையில், சமூக நலத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வந்த ஆசிரியர் சதீஷுக்கு எதிராக மாணவ, மாணவிகள் குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.