நாகையில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வைத்திருந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்களை சலூன் கடைக்கு அழைத்து சென்று முடி வெட்டிவிட்ட ஆசிரியையின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடில் ஆண்டனிஸ் என்கின்ற ஆண்கள் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில் படிக்க கூடிய மாணவர்கள் புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வெட்டி பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இது போன்று முடி வைத்திருந்தனர்.
அவர்களை அழகாக முடி வெட்டி வரும்படி பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கி உள்ளனர். இதனை மாணவர்கள் சட்டை செய்யாமல் புள்ளிங்கோ ஸ்டைலிலே பள்ளிக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் புள்ளிங்கோ மாணவர்களை நாகையில் உள்ள சலூன்கடைக்கு அழைத்து வந்து தங்களது சொந்த செலவில் மாணவர்களுக்கு முடி வெட்டி உள்ளனர். முடி வெட்டுவதை பார்த்த மாணவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
புள்ளிங்கோ மாணவர்களை ஆசிரியை சலூன் கடைக்கு அழைத்து வந்து முடி வெட்டி விட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.