தமிழகம்

டிவியில் பேட்டி வரவேண்டும் என்பதற்காக எதையாவது உளறக்கூடாது : திருமாவளவனுக்கு நயினார் பதிலடி!

திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என செல்வ பெருந்தகை கூறியது குறித்த கேள்விக்கு, மக்களுக்கு ஆதரவான திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு செய்யும். ஹைட்ரோ கார்பன் அனுமதி கொடுத்தது யார் என்று உங்களுக்கு தெரியும். அவர்களுடைய கூட்டணி ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட ஒன்று என கூறினார்.

இதையும் படியுங்க: ரவீனாவுக்கு ரெட் கார்டு… சின்னத்திரை பக்கமே தலைகாட்டக்கூடாது : அதிரடி உத்தரவு!

எல்லோருக்கும் எல்லாம் என்ற உதயநிதி கூறியது குறித்த கேள்விக்கு, எல்லோருக்கும் எல்லாம் கொடுப்பது தவறில்லை. ஆனால் அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும் சொல்வது முக்கியமில்லை எல்லோருக்கும் கிடைப்பது மாதிரி செய்ய வேண்டும் என பதிலளித்தார்.

செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்பது நீதிமன்றத்தின் கருத்து. அதில், நாங்கள் கருத்து சொன்னால் சரியாக இருக்காது. அது அரசாங்கம் மற்றும் நீதிமன்றத்திற்கு இடையேயான பிரச்சனை.

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து பூத் கமிட்டி மீட்டிங் குறித்த கேள்விக்கு, இந்திய திருநாட்டில் எல்லோருக்கும் சுதந்திரம் உள்ளது எழுத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் எல்லாம் உள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். இதில் நாம் கருத்து சொல்ல முடியாது.

இலை மீது தாமரை மலரும் என்பது குறித்த கேள்விக்கு, இலையும், தாமரையும் கூட்டணியாக சேர்ந்து அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்பது அர்த்தம். தாமரைப்பூ உள்ளது என்றால் கீழே இலை இருக்கத்தான் செய்யும்.

நீங்கள் கேள்வி கேட்கும் முன்பு நான் பதில் கூறுகிறேன். இட ஒதுக்கீடு குறித்து இபிஎஸ் மற்றும் அமித்ஷா பேசிக்கொள்வார்கள்.

திமுக மக்களுக்கு எதிராக செயல்படுகிறது முதலில் அகற்றப்பட வேண்டும். பழைய கதையை திண்டுக்கல்லில் புதிதாக பூட்டை திறக்கிறீர்கள்.

காஷ்மீர் குறித்து திருமாவளவன் கருத்து கூறுவது குறித்த கேள்விக்கு, அனைவருக்கும் நாட்டு பற்று என்பது வேண்டும். தேசப்பற்று தேச உணர்வு என்பது வேணும். அதை புரிந்து கொண்டு எல்லா தலைவர்களும் நாட்டின் நன்மை கருதி பேச வேண்டும். தொலைக்காட்சியில் வரவேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது.

தெலுங்கானா முதல்வர் பேசுவதை பார்த்தீர்களா? பாகிஸ்தான் துண்டாடப்பட வேண்டும். பாரத பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு தர வேண்டும் என ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தேச உணர்வுக்காக பேசுகிறார். ரேவந்த் ரெட்டி போன்ற நபர்களுக்கு எனது வணக்கங்கள்” என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

5 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

5 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

6 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

6 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

6 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

7 hours ago

This website uses cookies.