நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஏலச்சீட்டு பணத்தை செலுத்தாத நபர் மீது திமுகவை சேர்ந்த தந்தை, மகன் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜ். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இதையடுத்து, அவரது வீட்டின் அருகே உள்ள திமுக நகர் மன்ற உறுப்பினரின் கணவர் நடத்தி வந்த மாதாந்திர ஏல சீட்டில் 3 லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு போட்டு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, ஏலச்சீட்டு எடுத்துவிட்டு 6 மாத மாக ஏலச்சீட்டு தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சீட்டு பணம் கேட்க சென்ற சண்முகத்தினை சண்முகராஜன் அவமரியாதை செய்ததால் அவரது மகன் தங்கமணி கோபத்தில் சீட்டு பணம் தர மறுத்த சண்முகராஜ் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, திமுகவை சேர்ந்த தந்தை, மகன் ஆகிய இருவரும் சேர்ந்து சண்முகராஜை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்தனர்.
இதன் பின்னர் பள்ளிபாளையம் போலீசார் காவல்நிலையத்தில் சீட்டு பணம் தரமறுத்து தாக்குதல் செய்ததாக திமுக நகர்மன்ற உறுப்பினரின் கணவரும் – மகனும் சேர்ந்து புகார் கொடுக்க சென்ற நிலையில், புகார் ஏற்க மறுத்து இரு தரப்பினரையும் போலீசார் சமரசம் செய்து வைத்து அனுப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.