பெங்கரூளுவில் இருந்து வந்த போதை மாத்திரைகள்.. புதுக்கோட்டை பீச் ஓரத்தில் நடந்த ஷாக் சம்பவம்..!!!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டைப்பட்டினம் கடற்கரை பகுதியில் சிலர் போதை மாத்திரைகளை வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்து வருவதாக கோட்டைப்பட்டினம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த நான்கு பேரை பிடித்து விசாரணை செய்த பொழுது அவர்கள் அதே கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த அப்துல் அகமது காஜாமைதீன், முகமது அப்துல்லா, ஷேக் அப்துல்லாஹ்,அப்துல் ரகுமான் என்பதும் அவர்கள் 3000 ரூபாய் மதிப்புடைய 10 போதை மாத்திரைகளை ரகசியமாக வைத்து விற்பனை செய்து வந்ததையும் கண்டறிந்தனர்.
போதை மாத்திரைகளை கைப்பற்றி, அந்த நான்கு பேரையும் கைது செய்த கோட்டைப்பட்டினம் காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து இந்த போதை மாத்திரை வாங்கி வந்ததும், அதனை கோட்டைப்பட்டினம் பகுதியில் 3000 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்து வந்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்ட நிலையில் அந்த நான்கு பேரின் மீது வழக்கு பதிந்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
கோட்டைப்பட்டினம் கடற்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.