கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள திரையரங்கில் கருடன் படம் வெளியான நிலையில் தியேட்டரில் படம் பார்க்க வந்த 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினருக்கு நிர்வாகம் டிக்கெட் கொடுக்க அனுமதி மறுத்தது.
அதனைத் தொடர்ந்து இது குறித்து புகார் அளிக்க கடலூர் கோட்டாட்சியரிடம் நரிக்குறவர்கள் வந்தனர். கோட்டாட்சியர் வேறு ஒரு மீட்டிங்கில் இருப்பதால் வட்டாட்சியர் பலராமன் இது குறித்து விசாரணை மேற்கொண்டார்.
கடலூர் புதுநகர் காவல் நிலைய போலீசாரும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். கடலூர் நியூ சினிமா திரையரங்கிற்கு நரிக்குறவர்களை அழைத்து வந்த வட்டாட்சியர் பலராமன் அங்கு டிக்கெட் வாங்கி அவர்களுக்கு வழங்கினார்.
மேலும் படிக்க: குமரியில் தியானத்தை நிறைவு செய்தார் மோடி… திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு மரியாதை!!
அந்த டிக்கெட்டை பெற்றுக் கொண்டு அடுத்த காட்சி படம் பார்ப்பதற்கு தற்பொழுது நரிக்குறவர்கள் காத்திருக்கின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
This website uses cookies.