நடிகை நயன்தாரா, தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்தில் ஷாருக்கான், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி என கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தற்போது, நடிகை நயன்தாரா, தற்போது கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
நயன் , விக்கி திருமண நிகழ்ச்சியை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் வாங்கி இருப்பதால், திருமணத்தில் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து, வெளியான இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாக பரவியது.
திருமணத்தை முடித்த கையோடு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம், செய்தியாளர் சந்திப்பு என புதுமண தம்பதிகள் மிகவும் பிஸியாக இருந்து வந்தனர். இதையடுத்து, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நயன்தராவின் அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கியதற்கான கேரளா சென்றனர். அங்கும் கோவில் கோவிலான சென்றனர். இதையடுத்து, புது மண தம்பதிகளாக நயன்தாராவின் திருமணம் பற்றிய தகவல்கள் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி இன்னும் ஒரு சில நாட்களில் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லீ இயக்கத்தில் நடிகை நயன்தாரா, தற்போது ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின்இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று தொடங்குகிறது. இதன் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா அடுத்த வாரம் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஹனிமூனே போகல.. அதுக்குள்ள ஷூட்டிங்கிற்கு திரும்பனுமா என கிண்டலாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…
பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…
This website uses cookies.