தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் தான் நயன்தாரா மற்றும் சமந்தா. சமீபத்தில் இருவரும் இணைந்து நடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் தோல்வி படம் இல்லை என்றும் போட்ட முதலீட்டை எடுத்து விட்ட சுமாரான லாபம் கொண்ட படம் என்றும் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள ‘அஜித் 62’ படத்தின் படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது, இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளன. அதாவது பேய் கதையில் நடிக்க இருக்கின்றனர். புதிதாக உருவாகவுள்ள பேய் படத்தில் நடிக்க நயன்தாரா மற்றும் சமந்தாவிடம் கேட்டுள்ளார்களாம்.
இதில் நயன்தாரா அல்லது சமந்தா இருவரில் ஒருவர் கண்டிப்பாக இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. நயன்தாரா இதற்குமுன் மாயா எனும் பேய் படத்திலும், சமந்தா யு டர்ன் படத்திலும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.